பாம்பு கடித்து கோவில் பூசாரி சாவு


பாம்பு கடித்து கோவில் பூசாரி சாவு
x

பாம்பு கடித்து கோவில் பூசாரி சாவு இறந்தார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே மணவிடுதி ஊராட்சி குப்புடையான் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 64). கோவில் பூசாரி. இவர் முனியன் கோவிலில் கிடா வெட்டு பூஜை செய்வதற்காக முக்கியஸ்தர்களிடம் ஆலோசித்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று அவரை கடித்ததில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை அந்தவழியாக சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த கோவிந்தராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், செம்பட்டிவிடுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story