உலக நலன் வேண்டி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் அன்னாபிஷேகம்


உலக நலன் வேண்டி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் அன்னாபிஷேகம்
x

உலக நலன் வேண்டி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. அதன்படி பழனி முருகன் கோவிலில் கடந்த 11-ந்தேதியும், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் நேற்றும் அன்னாபிஷேகம் நடந்தது.

இந்நிலையில் இன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோவில் மண்டபத்தில் 3 வெள்ளி கலசங்கள் வைத்து விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், ஸ்கந்தயாகம் நடந்தது.

அதையடுத்து சாயரட்சை பூஜையில் சிவன், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு கலச அபிஷேகம், 16 வகை அபிஷேகம் நடந்தது. பின்னர் மஞ்சள் நிற அன்னத்தால் கிரீடம் வைத்து சிறப்பு அலங்காரம், அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 16 வகை தீபாராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர்கள் ஹரிகரமுத்து, செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story