புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 14 Oct 2023 7:00 PM GMT (Updated: 14 Oct 2023 7:00 PM GMT)

புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது., இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி

புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது., இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதன்படி தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய ஸ்ரீ பரவாசுதேவ பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை, சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி மேளதாளங்கள் முழங்க வரிசை அழைப்பு ஊர்வலமும், தொடர்ந்து சாமிக்கு சிறப்பு வழிபாடுகளுடன் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

சென்னகேசவ பெருமாள்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சாமி மற்றும் கருடாழ்வாருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றது. இதேபோன்று அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், சோகத்தூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராயப் பெருமாள் சாமி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வெங்கட்ரமண சாமி கோவில்

இதேபோன்று மணியம்பாடி ஸ்ரீ வெங்கட்ரமண சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. சாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவை தொழில் அதிபர்கள் கிருபாகரன், சண்முகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் பேரூராட்சி தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தர்மபுரி அருகே புலிக்கரையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் சாமி கோவிலில் நேற்று அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனையும், உபகார பூஜைகளும் நடைபெற்றது. கொடி மரத்தில் முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் பக்தர்கள் மகாதீபம் ஏற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பழைய தர்மபுரி அடுத்த வரதகுப்பத்தில் உள்ள ஸ்ரீ வெங்கட்ரமண சாமி கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சென்றாய பெருமாள் கோவில்

இதேபோல் செட்டிக்கரை ஸ்ரீ பெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் சாமி கோவில், கம்பைநல்லூர் ஸ்ரீ லட்சுமி நாராயண சாமி கோவில், தென்கரைக்கோட்டை பட்டாபிராமர் சாமி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது.

இதேபோன்று மூக்கனூர் அக்கமணஹள்ளி ஸ்ரீ ஆதிமூல வெங்கட்ரமண சாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சாமிக்கு தங்கக்கவசம் சாத்நப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. விழாவையையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சுயம்பு பெருமாள்

தர்மபுரி அருகே தோக்கம்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியில் உள்ள ஸ்ரீ சுயம்பு சென்றாய பெருமாள் கோவிலில் அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் கோபாலகிருஷ்ண அய்யர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story