நாமகிரிப்பேட்டையில் ரூ.23 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்


நாமகிரிப்பேட்டையில்  ரூ.23 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
x

நாமகிரிப்பேட்டையில் ரூ.23 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைதோறும் மஞ்சள் ஏலம் நடைபெறும். நேற்று வழக்கம்போல் மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, அரியாக் கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பபட்டி, புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை கொண்டு வந்திருந்தனர்.

ஏலத்தில் ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம எடுத்தனர். நேற்று நடந்த ஏலத்தில் 550 மஞ்சள் மூட்டைகள் ரூ.23 லட்சத்திற்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் விரலி ரகம் 400 மூட்டைகளும், உருண்டை ரகம் 130 மூட்டைகளும், பனங்காலி ரகம் 20 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவின்டால் ரூ.5,602 முதல் அதிகபட்சமாக ஒரு குவின்டால் ரூ.8,102-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.5,402-க்கும், அதிகபட்சமாக ஒரு குவின்டால் ரூ.7,229-க்கும், பனங்காலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.7,012-க்கும், அதிகபட்சமாக ரூ.11,089-க்கும் ஏலம் விடப்பட்டது.


Next Story