பரமத்திவேலூர் சந்தையில் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்


பரமத்திவேலூர் சந்தையில்  ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்
x

பரமத்திவேலூர் சந்தையில் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 979 கிலோ தேங்காய்களை ‌விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.25.55-க்கும், குறைந்தபட்சமாக ரூ.21.10-க்கும், சராசரியாக ரூ.23-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 870-க்கு ஏலம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ‌ஏலத்திற்கு 4 ஆயிரத்து 753 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.24.39-க்கும், குறைந்தபட்சமாக ரூ.21-க்கும், சராசரியாக ரூ.‌23-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 299-க்கு ஏலம் நடந்தது.


Next Story