ராசிபுரத்தில்ரூ.53 லட்சத்திற்கு பருத்தி ஏலம்


ராசிபுரத்தில்ரூ.53 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 6 March 2023 7:00 PM GMT (Updated: 6 March 2023 7:00 PM GMT)
நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரத்தில் நடந்த ஏலத்தில் ரூ.53 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

பருத்தி ஏலம்

ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்எஸ். சங்க கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கப்பட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் 2,229 பருத்தி மூட்டைகள் ரூ.53 லட்சத்துக்கு விற்பனை ஆனது. ஆர்.சி.எச். ரக பருத்தி 2,126 மூட்டைகளும், டி.சி.எச். ரக பருத்தி 36 மூட்டைகளும், கொட்டு பருத்தி 67 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன.

வரத்து குறைவு

இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.7,769-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8,569-க்கும், டி.சி.எச் ரக பருத்தி குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.7,769-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8,442-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.4,970 முதல் அதிகபட்சமாக ரூ.5,990-க்கும் ஏலம் விடப்பட்டது.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்த அளவில் பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story