நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பார்களுக்கான டெண்டர் விடப்படும்- அமைச்சர் முத்துசாமி


நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பார்களுக்கான டெண்டர் விடப்படும்- அமைச்சர் முத்துசாமி
x

எந்த தவறும் இல்லாமல் டாஸ்மாக் துறையை நடத்த வேண்டும் என்பது முதல்வரின் விருப்பமாக உள்ளது. கடையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற ஆசை யாருக்கும் இல்லை என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

ஈரோடு,

ஈரோடு: ஈரோட்டில் இன்று மது விலக்கு ஆய தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மது விற்பனை செய்தல், தொழிலாளர்கள் பிரச்சனைகள், டாஸ்மாக் கடைகளில் இட வசதியின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளை ஒழுங்கு படுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக்கில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அதன்படி தான் பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன. பத்திரிகையாளர்களிடமும் இது குறித்து கருத்து கேட்கிறோம். ஆனால் விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கின்றன. எங்களது உணர்வுகளை புரிந்து கொண்டு நல்ல கருத்துக்களை தெரியப்படுத்த வேண்டும்.

விரைவில் டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்களை அழைத்து பேசி அவர்கள் பிரச்சினைகளை தீர்க்க எண்ணி உள்ளோம். டாஸ்மாக் பார் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பார்களுக்கான டெண்டர் விடப்படும். அதிக விலைக்கு மது விற்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து புகார் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எந்த தவறும் இல்லாமல் டாஸ்மாக் துறையை நடத்த வேண்டும் என்பது முதல்வரின் விருப்பமாக உள்ளது. கடையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற ஆசை யாருக்கும் இல்லை.


Next Story