தென்காசி: குற்றாலம் அருவியில் குளிக்கத் தடை.!


தென்காசி: குற்றாலம் அருவியில் குளிக்கத் தடை.!
x

கோப்புப்படம் 

நேற்று பெய்த மழையால் அருவிகளில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். இந்த ரம்மியமான சூழலில் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

அருவியில் சீராக தண்ணீர் வரத்து இருந்ததால், சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்ததால், அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று பெய்த மழையின் காரணமாக அருவிகளில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.


Next Story