நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ

கொடைக்கானல் நகராட்சி குப்பை கிடங்கில் தீப்பிடித்து பயங்கரமாக எரிந்தது.
கொடைக்கானல் பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. இதன் காரணமாக சருகுகள், புதர்கள் கருகி வருகின்றன. இந்நிலையில் நேற்று பகல் நேரத்தில் பிரகாசபுரம் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





