தஞ்சாவூரில் இருந்து ஈரோட்டுக்குரெயில் மூலம் வந்த 2 ஆயிரம் டன் நெல்


தஞ்சாவூரில் இருந்து ஈரோட்டுக்குரெயில் மூலம் வந்த 2 ஆயிரம் டன் நெல்
x

தஞ்சாவூரில் இருந்து ஈரோட்டுக்கு ரெயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல் வந்தது.

ஈரோடு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரெயில் மூலம் ஈரோட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ரெயில் நேற்று காலை ஈரோடு ரெயில்வே பணிமனைக்கு வந்தடைந்தது. பின்னர் நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து இறக்கி, லாரிகளில் ஏற்றி நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நெல் மூட்டைகள் நெல் அரவை முகவர்களிடம் கொடுத்து புழுங்கல் அரிசியாக மாற்றப்பட்டு, மாவட்டத்தில் உள்ள பொதுவினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பப்பட்டு பின்னர் அங்கிருந்து ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story