36-வது மாபெரும் தடுப்பூசி முகாம்; 1,513 மையங்களில் இன்று நடக்கிறது


36-வது மாபெரும் தடுப்பூசி முகாம்; 1,513 மையங்களில் இன்று நடக்கிறது
x

36-வது மாபெரும் தடுப்பூசி முகாம் 1,513 மையங்களில் இன்று நடக்கிறது.

கரூர்

கரூர் மாவட்டத்தில் 36-வது மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 1,513 மையங்களில் நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுடைய பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் 15 முதல் 18 வயதுடைய கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் சதவீதம் குறைவாக உள்ளதால் அவர்களுக்கு கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. இவ்வயதுடையவர்கள் இத்தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி அரசு நிலையங்களிலேயே 75-வது சுதந்திர தினத்தையொட்டி கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரை 75 நாட்களுக்கு இலவசமாக போட்டுக்கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி 2-ம் தவணை செலுத்திய தேதியிலிருந்து 9 மாத கால அவகாசத்திலிருந்து தற்போது 6 மாத கால அவகாசமாக குறைக்கப்பட்டுள்ளதால் இவர்களும் இத்தடுப்பூசி முகாமை பயன்படுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இதேபோல் கரூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இன்னும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டிய நிலுவையில் உள்ளவர்கள் மொத்தம் 46,826 பேர், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியுடையவர்கள் 5,49,695 பேர் உள்ளனர். இவர்களும் இம்முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story