2 ஆடுகளை திருடி சென்ற ஆசாமிகள்

2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் தாலுகா மேசநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னச்சாமி மகன் செந்தில்குமார் (வயது 37). இவர் வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் 2 ஆடுகளை வீட்டு முன்பு கட்டி இருந்தார். அதிகாலையில் ஆடு கட்டி இருக்கும் பகுதியில் சத்தம் கேட்டு வெளியே வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் 2 ஆடுகளை திருடி கொண்டு தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக செந்தில்குமார் திருமங்கலம் தாலுகா ேபாலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





