இந்தோனேசியாவில் தேனிலவுக்கு சென்று கடலில் உயிரிழந்த சென்னை டாக்டர் தம்பதியின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு


இந்தோனேசியாவில் தேனிலவுக்கு சென்று கடலில் உயிரிழந்த  சென்னை டாக்டர் தம்பதியின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x

இந்தோனேசியாவிற்கு தேனிலவுக்காக சென்ற டாக்டர் தம்பதியின் உடல்கள் விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டுவரபட்டன

சென்னை,

இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்ற பூந்தமல்லியை சேர்ந்த புதுமண டாக்டர் தம்பதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை சேர்ந்த மருத்துவர்களான விபூஷ்னியா மற்றும் லோகேஸ்வரன் ஆகியோருக்கு கடந்த 1 -ம் தேதி திருமணம் நடைபெற்றது.

தேனிலவு கொண்டாட இருவரும் இந்தோனேஷியா சென்ற நிலையில்,அங்குள்ள பாலி தீவின் கடல் பகுதியில் போட்டோ ஷூட் நடத்தியபோது எதிர்பாராவிதமாக கடலில் மூழ்கி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

லோகேஸ்வரனின் உடல் மீட்கப்பட்ட நிலையில், விபூஷ்னியாவின் உடலை இந்தோனேசியா போலீசார் தேடி வந்தனர். தீவிர தேடுதலுக்கு பின் விபூஷ்னியாவின் சடலும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இருவரது சடலத்தையும் சென்னைக்கு கொண்டுவர மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்நிலையில், கடலில் விழுந்து உயிரிழந்த டாக்டர் தம்பதி லோகேஸ்வரன் , விபூஷ்னியா வின் உடல் இந்தோனேசியாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருவரது உடலும் சென்னை வந்தடைந்த நிலையில் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து விபூஷ்னியாவின் உடல் பூந்தமல்லியில் உள்ள அவருடைய வீட்டிற்கும் லோகேஸ்வரனின் உடல் சேலத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கும் அனுப்பிவைக்கப்பட்டன. இருவரது உடலுக்கும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.


Next Story