மாந்தோப்பில் காவலாளி பிணம்


மாந்தோப்பில் காவலாளி பிணம்
x

பேரிகை அருகே மாந்தோப்பில் காவலாளி பிணம்; கொலையா? போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி

ஓசூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே நரசாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குர்ரப்பா (வயது 50). காவலாளி. இவருக்கு நரசம்மா என்ற மனைவியும் 4 மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். குர்ரப்பா, மனைவியுடன் நரசாபுரத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில், அவரது மகள் சிவரஞ்சனி போன் செய்தபோது குர்ரப்பா போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து பேரிகை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் மாந்தோப்பிற்கு சென்று பார்த்தபோது, குர்ரப்பா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே மதுபாட்டில்கள் கிடந்தன. அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி போலீசார், பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குர்ரப்பா அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தாரா? அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story