பிணமாக கிடந்த முதியவர் அடையாளம் தெரிந்தது


பிணமாக கிடந்த முதியவர் அடையாளம் தெரிந்தது
x

ஆம்பூர் அருகே பிணமாக கிடந்த முதியவர் அடையாளம் தெரிந்தது

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் அருகே பிணமாக கிடந்த முதியவர் அடையாளம் தெரிந்தது

ஆம்பூரை அடுத்த நேதாஜி ரோட்டில் உள்ள கிராமநிர்வாக அலுவலகம் அருகே கடந்தசில நாட்களுக்கு முன்பு சுமார் 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் இறந்துகிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்த போலீசார் அவரது குடும்பத்தினரிடம் ரங்கநாதன் உடலை ஒப்படைத்தனர்.


Next Story