அரியலூரில் புத்தக கண்காட்சி 23-ந் தேதி தொடங்குகிறது


அரியலூரில் புத்தக கண்காட்சி 23-ந் தேதி தொடங்குகிறது
x

அரியலூரில் புத்தக கண்காட்சி 23-ந் தேதி தொடங்குகிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகிற 23-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி வரை என 10 நாட்கள் புத்தக கண்காட்சி நடத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமை தாங்கி பேசுகையில், புத்தக கண்காட்சி அரியலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்திடவும், 80-க்கும் மேற்பட்ட முன்னணி புத்தக பதிப்பகங்களின் அரங்குகள் அமைத்திடவும், முன்னணி பேச்சாளர்கள் மற்றும் நெறியாளர்களை கொண்டு சொற்பொழிவுகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடத்திடவும், அனைத்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளும் கலந்து கொள்ளும் வகையில் போட்டிகள் நடத்திடவும், குழந்தைகளுக்கு தேவையான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவகங்கள் அமைத்திடவும் வேண்டும் என அறிவுறுத்தினார்.


Next Story