வயலுக்கு சென்ற வாலிபர் மின்சாரம் பாய்ந்து பலி

வயலுக்கு சென்ற வாலிபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
ஜீயபுரம்:
மின்கம்பியை மிதித்தார்
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள கடியாக்குறிச்சி கீழத்தெரு பகுதிைய சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகன் வினோத்(வயது 23). இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் சிவன் கோவில் அருகில் உள்ள தன்னுடைய வயலுக்கு மருந்து அடிப்பதற்காக சென்றார். அப்போது வயலுக்கு செல்லும் வழியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதையறிந்து அங்கு வந்த அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் வினோத்தின் உடலை கண்டு கதறி அழுதனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற ஜீயபுரம் போலீசார், வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.