திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அழகுநிலையம் சென்ற மணப்பெண் திடீர் மாயம்


திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அழகுநிலையம் சென்ற மணப்பெண் திடீர் மாயம்
x

உளுந்தூர்பேட்டை அருகே திருமண வரவேற்பு நிகழ்சிச்க்காக அழகுநிலையம் சென்ற மணப்பெண் திடீரென மாயமானதால் வாலிபருக்கு நடக்க இருந்த திருமணம் நின்றது.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 26 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும், 23 வயதுடைய இளம்பெண்ணுக்கும் நேற்று காலை உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக இரு வீட்டார் சார்பிலும் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு திருமண மண்டபத்தில் பெண் அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் தீவிரமாக செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மணப்பெண் முக அலங்காரம் செய்து கொள்ள அழகு நிலையத்துக்கு சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் அவர், வீடு திரும்பவில்லை.

இதனால் பதற்றமடைந்த உறவினர்கள், அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். இருப்பினும் கிடைக்கவில்லை.

திருமணம் நின்றது

இது குறித்து விசாரித்ததில் திருமணம் பிடிக்காததால், அந்த பெண், அழகுநிலையம் சென்று விட்டு ஓடியது தெரிந்தது. இதனிடையே இது பற்றி அறிந்த மணப்பெண் வீட்டார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவர்கள் செய்வது அறியாது தவித்தனர்.

மேலும் மண்டபத்தில் திருமண விழா ஏற்பாடுகளை செய்து வந்த உறவினர்களும் சோகத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதே போல் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றதை காணமுடிந்தது. திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் ஓட்டம் பிடித்ததால், வாலிபருடன் நடக்க இருந்த திருமணம் நின்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story