சாலையில் கவிழ்ந்த டிராக்டர் மீது கார் மோதல்


சாலையில் கவிழ்ந்த டிராக்டர் மீது கார் மோதல்
x

சாலையில் கவிழ்ந்த டிராக்டர் மீது கார் மோதியது.

பெரம்பலூர்

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லோடு ஏற்றி சென்ற டிராக்டர் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்ேபாது எதிர்பாராதவிதமாக சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்த கார் டிராக்டர் மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.


Next Story