கார் பள்ளத்தில் கவிழ்ந்து அ.தி.மு.க. பிரமுகர் மனைவி பலி


கார் பள்ளத்தில் கவிழ்ந்து அ.தி.மு.க. பிரமுகர் மனைவி பலி
x

கரூர் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து அ.தி.மு.க. பிரமுகரின் மனைவி பலியானார். அவரது மகன் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

கரூர்

சுற்றுலா வந்தனர்

ஈரோடு மாவட்டம், அந்தியூரை சேர்ந்தவர் எஸ்.ஜி.சண்முகானந்தம் (வயது 53). இவர் அந்தியூர் அ.தி.மு.க. ஒன்றிய துணைச்செயலாளராக உள்ளார். இவரது மனைவி புஷ்பவள்ளி (47). இந்த தம்பதியின் மகன் மோகன், உறவினர் சரஸ்வதி.

இவர்கள் 4 பேரும் ஒரு காரில் அந்தியூரில் இருந்து பிள்ளையார்பட்டி, புதுக்கோட்டை பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர். பின்னர் சுற்றுலாவை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் மதியம் அதே காரில் அந்தியூருக்கு சென்று கொண்டிருந்தனர். காரை டிரைவர் திருக்குமரன் ஓட்டினார்.

கார் பள்ளத்தில் கவிழ்ந்தது

அந்த கார் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சீத்தப்பட்டி காலனி அருகே சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் காரின் இடிபாடுகளில் சிக்கிய புஷ்பவள்ளி பலத்த காயம் அடைந்தார். சண்முகானந்தம், மோகன், சரஸ்வதி, டிரைவர் திருக்குமரன் ஆகிய 4 பேரும் ேலசான காயம் அடைந்தனர்.

பெண் பலி

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே புஷ்பவள்ளி பரிதாபமாக இறந்தார்.

பின்னர் புஷ்பவள்ளியின் உடல் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காயம் அடைந்த 4 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story