சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது

தேவூர்:-
ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையம் மணிநகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 65). பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று ஆனந்தராஜ், அவருடைய மனைவி அமுதா மற்றும் 2 பேரக்குழந்தைகளுடன் சொகுசு காரில் நங்கவள்ளி பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். தேவூர் அருகே அரசிராமணி செட்டிப்பட்டி வழியாக கார் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஆனந்தராஜ் உள்பட 4 பேரும் லேசான காயங்களுடன் தப்பினர். அக்கம் பக்கத்தினர் மற்றும் தேவூர் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





