- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
முதியவரின் கையை முறித்த வாலிபர் மீது வழக்கு



முதியவரின் கையை முறித்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கீழசிந்தமணி காலனி தெருவை சேர்ந்தவர் கைலாசம் மகன் சொக்கலிங்கம்(வயது 70). இவரது பேத்தி பவானி என்பவரை அதே பகுதியை சேர்ந்த தங்கையன் மகன் வெற்றி(25) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். வெற்றி தினமும் மது அருந்திவிட்டு பவானியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பவானி தனது தாத்தா சொக்கலிங்கம் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த வெற்றி பவானியை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். சொக்கலிங்கம் காலையில் வந்து அழைத்துச் செல்ல அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த வெற்றி, சொக்கலிங்கத்தை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சொக்கலிங்கத்திற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து சொக்கலிங்கம் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire