சிறுமி பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு


சிறுமி பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு
x

தூத்துக்குடி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தூத்துக்குடி

புதுக்கோட்டை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 26). இவர் 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாய், புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பேச்சிமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story