முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு..,!


முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு    உத்தரவு..,!
x
தினத்தந்தி 31 Jan 2023 1:44 PM GMT (Updated: 31 Jan 2023 1:47 PM GMT)

வருமானவரித்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

சென்னை,

வருமான வரித்துறை நடவடிக்கையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்ந்த வழக்கில் , வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

2016 சட்டமன்ற தேர்தலின் போது ரூ.7 கோடியை சேகர் ரெட்டியின் நிறுவனத்துக்கு வழங்கியதாக வேலுமணி மீது வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டது .

2017-18ம் நிதியாண்டில் வேலுமணியின் வருமானம் ரூ.7.04 கோடி என நிர்ணயித்து வருமான வரித்துறை உத்உத்தரவிட்டது .

இந்த நிலையில் வருமான வரித்துறை நோட்டீசை ரத்து செய்யவும், தடை விதிக்கவும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

வழக்கில் வருமானவரித்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது .மேலும் ,வேலுமணி மனு மீதான விசாரணை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது .




Next Story