அரசு கலைக்கல்லூரியில் முதுகலை படிப்பில் முதலாம் ஆண்டு சேர விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நடக்கிறது


அரசு கலைக்கல்லூரியில்  முதுகலை படிப்பில் முதலாம் ஆண்டு சேர விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 6 Sep 2023 7:15 PM GMT (Updated: 6 Sep 2023 7:15 PM GMT)

அரசு கலைக்கல்லூரியில் முதுகலை படிப்பில் முதலாம் ஆண்டு சேர விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நடக்கிறது.

சிவகங்கை


சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் துரையரசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் அனைத்து முதுநிலை பாடப்பிரிவுகளில் முதலாம் ஆண்டு சேர்வதற்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்த மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று(வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த பணி சம்பந்தப்பட்ட துறைகளில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

எனவே இணையவழியில் விண்ணப்பித்த அனைத்து மாணவ-மாணவிகளும் உரிய அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் இரண்டு நகல்களை கொண்டு வர வேண்டும். சேர்க்கை கட்டணமாக எம்.ஏ. படிப்பிற்கு ரூ.1000, எம்.எஸ்.சி. படிப்பிற்கு ரூ.1020-ம், எம்.எஸ்.சி. கணினி அறிவியல் படிப்பிற்கு ரூ.1520 செலுத்த வேண்டும். அழகப்பா பல்கலைக்கழகம் தவிர பிற பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் படித்த மாணவர்கள் கூடுதல் கட்டணமாக ரூ.200 சேர்த்து செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story