கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்


கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
x

விருதுநகரில் கலெக்டர் ஜெயசீலன் தேசிய கொடி ஏற்றி வைத்து 391 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.

விருதுநகர்


விருதுநகரில் கலெக்டர் ஜெயசீலன் தேசிய கொடி ஏற்றி வைத்து 391 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.

சுதந்திர தின விழா

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் ஜெயசீலன் நேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. போலீஸ் துறையில் அருப்புக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண்காரத், சிவகாசி உதவி சூப்பிரண்டு தனஞ்செயன், திருச்சுழி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீசன், வச்சகாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜ் உள்பட 57 பேருக்கும், தீயணைப்பு படையில் 13 பேருக்கும், மாவட்ட நிலை அலுவலர்கள் திட்ட இயக்குனர் டாக்டர் தண்டபாணி, ஆர்.டி.ஓ.க்கள் சாத்தூர் சிவகுமார், சிவகாசி விஸ்வநாதன், சமூக பாதுகாப்பு திட்ட உதவிகலெக்டர் அனிதா உள்ளிட்ட 24 பேருக்கும், 4 தொழிலதிபர்களுக்கும், 28 இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கலை நிகழ்ச்சிகள்

இவ்விழாவில் மாணிக்கம் தாகூர் எம்.பி. மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறந்த கலைநிகழ்ச்சிகள் நடத்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக விழாவிற்கு வந்த கலெக்டர் ஜெயசீலனை மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

அரசு பள்ளி

ஆலங்குளம் அரசு மேல்நிலைபள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமை ஆசிரியர் முத்துராஜ் தேசிய கொடி ஏற்றினார். ஆலங்குளம் டி.என்.சி. முக்கு ரோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் நடராசன் கம்யூனிஸ்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். கல்லமநாயக்கர்பட்டி எஸ்.எம்.எஸ். கல்லூரியில் கல்லூரி தாளாளர் முத்துவாழி தேசிய கொடியை ஏற்றினார்.

விருதுநகர்

விருதுநகர் கே.வி.எஸ். மேனேஜிங் போர்டுக்கு பாத்தியப்பட்ட பள்ளிகளில் சுதந்திர தின விழா பள்ளி செயலாளர் என்ஜினீயர் ராஜா தலைமையில் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்பட்டது. விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கல்லூரி செயலர் சர்ப்பராஜன் தேசிய கொடியை ஏற்றினார்.

விழாவில் கல்லூரி நிர்வாகக்குழுவினர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் சாரதி வரவேற்றார். முடிவில் சுயநிதி பாட பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காளிதாஸ் நன்றி கூறினார்.


Next Story