அழுகிய நிலையில் முதியவர் பிணம்


அழுகிய நிலையில் முதியவர் பிணம்
x
தினத்தந்தி 28 Sep 2023 6:45 PM GMT (Updated: 28 Sep 2023 6:46 PM GMT)

வளவனூரில் அழுகிய நிலையில் முதியவர் பிணமாக கிடந்தார்.

விழுப்புரம்

வளவனூர்,

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் பக்கமேட்டு தெரு பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிணமாக கிடந்த அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்றும், எப்படி இறந்தார் என்பது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story