சேதமடைந்த படித்துறையை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும்


சேதமடைந்த படித்துறையை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும்
x

சேதமடைந்த படித்துறையை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும்

திருவாரூர்

வேளுக்குடியில் சேதமடைந்த படித்துறையை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படித்துறை

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடி பாலம் அருகாமையில், அந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக வெள்ளையாற்றின் கரையோரத்தில் படித்துறை கட்டப்பட்டது. இந்த படித்துறையை வேளுக்குடி, நீர்மங்கலம், சித்தனங்குடி, மங்களாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கிராம மக்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக கோடை காலங்களில் இந்த வெள்ளையாற்றில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்பதால், கரையோரத்தில் கட்டப்பட்ட படித்துறை யில் இறங்கி குளிப்பது மற்றும் ஆடைகள் துவைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

தளங்கள் உடைந்து காணப்படுகிறது

வேளுக்குடியில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு வெளியூரில் இருந்து வரும் பக்தர்களும் இந்த படித்துறையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த படித்துறை கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. தற்போது படியில் அமைக்கப்பட்ட தளங்கள் உடைந்து, கரையோரத்தில் சரிந்து விழுந்து சேதமடைந்து காணப்படுகிறது.

இதனால் படித்துறையில் இறங்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் படித்துறையில் இறங்கும் போது தடுமாறி விழுந்து சிலர் காயம் அடைந்துள்ளனர்.

புதிதாக கட்டித்தர வேண்டும்

எனவே சேதமடைந்த படித்துறையை அகற்றி விட்டு அதே இடத்தில் வெள்ளையாற்றின் கரையோரத்தில் புதிதாக படித்துறை கட்டித்தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அந்தபகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story