நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை; நீட்டை ஒழித்துக்கட்டுவோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை; நீட்டை ஒழித்துக்கட்டுவோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அனிதாவை நீட் தேர்வு கொலை செய்த வடு நம் மனதில் என்றும் இருக்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அனிதாவை நீட் தேர்வு கொலை செய்த வடு நம் மனதில் என்றும் இருக்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

"நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதா நம்மை விட்டுப் பிரிந்து இன்றோடு வருடங்கள் ஆறு ஆகின்றன. ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் தங்கை அனிதாவை நீட் தேர்வு கொலை செய்த வடு நம் மனதில் என்றும் இருக்கும். நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக இறுதிவரை போராடிய தங்கை அனிதா மறைந்த இந்நாளில், ஓர் அண்ணனாக அவரை நினைவு கூர்கிறேன்.

நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்தநாள் நிச்சயம் வரும். நீட்டை ஒழித்து கட்டுவோம்." இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story