பழுதடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடிக்க வேண்டும்


பழுதடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடிக்க வேண்டும்
x

பழுதடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடிக்க வேண்டும்

திருவாரூர்

தில்லைவிளாகம் துறைதோப்பு பகுதியில் பழுதடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழுதடைந்த ரேஷன் கடை கட்டிடம்

முத்துப்பேட்டை தாலுகா தில்லைவிளாகம் துறை தோப்பில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் அப்பகுதி பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடத்தின் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்கூரையின் மீது தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. மழை காலங்களில் மழைநீர் கட்டிடத்தின் உள்ளே கசிந்து வருகிறது. இதனால் பொருட்கள் வீணாகி வரும் அபாயம் உள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்துடன் பொதுமக்கள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.

இடிக்க வேண்டும்

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழை காலம் தொடங்குவதற்கு முன்பு பழுதடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story