அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு


அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
x

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் காட்டங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், வில்லியம்பாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் செலவில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டம் கட்டப்பட்டு வருகிறது. ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணியையும், பாலூர் ஊராட்சி மேலச்சேரி பகுதியில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டையும் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மேலச்சேரி ஏரியின் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் (பயிற்சி) அபிலாஷ் கவுர், வில்லியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் மேனகா ஏகாம்பரம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story