டிரைவர் தீக்குளித்து தற்கொலை


டிரைவர் தீக்குளித்து தற்கொலை
x

பட்டுக்கோட்டை அருகே குடும்ப தகராறில் டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையை அடுத்த கொண்டிகுளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி (வயது52). லாரி டிரைவரான இவர், குடும்பத்தகராறு காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து வீரமணி தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவியதால் அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரமணி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.இதுகுறித்து புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story