மாடியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் சாவு

சங்ககிரி:-
சங்ககிரி ஆர்.எஸ். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 65). லாரி டிரைவர். இவர் தனது வீட்டு மாடியில் உள்ள தொட்டியில் தண்ணீர் உள்ளதா? என பார்க்க மேலே ஏறினார். அப்போது அவர் கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி ராஜமாணிக்கம் இறந்து விட்டார். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





