தாய் இறந்த அதிர்ச்சியில் டிரைவர் சாவு


தாய் இறந்த அதிர்ச்சியில் டிரைவர் சாவு
x

வாலாஜா அருகே தாய் இறந்த அதிர்ச்சியில் டிரைவர் உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை

வாலாஜாவை அடுத்த கீழ்கரடிகுப்பம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 75). இவவது மகன் குமார் (45). பொக்லைன் டிரைவராக வேலைபார்த்து வந்தார். தனலட்சுமி உடல்நிலை சரியில்லாமல் நேற்று மதியம் இறந்து விட்டார்.

குமார் தனது தாயின் உடலை கட்டிப்பிடித்தபடி அழுது கொண்டே இருந்தார். இந்த நிலையில் மாலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் அவரை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து குமார் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தாய் இறந்த அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு மகனும் இறந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. குமாரின் மகன் கிருஷ்ணகாந்த் (21) என்பவர் சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு பாலாற்று பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story