சாலையின் தடுப்புச்சுவரில் மினிலாரி மோதி டிரைவர் பலி


சாலையின் தடுப்புச்சுவரில் மினிலாரி மோதி டிரைவர் பலி
x
தினத்தந்தி 30 April 2023 7:00 PM GMT (Updated: 30 April 2023 7:01 PM GMT)

புதுக்கோட்டை அருகே சாலையின் தடுப்புச்சுவரில் மினிலாரி மோதி டிரைவர் பலியானார்.

தூத்துக்குடி

புதுக்கோட்டை அருகே சாலையின் தடுப்புச்சுவரில் மினிலாரி மோதி டிரைவர் பலியானார்.

மினிலாரி

நெல்லை மாவட்டம் துறையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 63). லாரி டிரைவர். இவர் சம்பவத்தன்று மினிலாரியில் சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி நோக்கி வந்தார்.

அவர் புதுக்கோட்டை தட்டப்பாறை விலக்கு அருகே வரும் போது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது மினிலாரி மோதி விபத்து ஏற்பட்டது.

டிரைவர் பலி

இதில் பலத்த காயம் அடைந்த டிரைவர் சுப்பிரமணியன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story