டிரைவரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு


டிரைவரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு
x

லாரி டிரைவரை தாக்கி பணம், செல்போன் பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரை சேர்ந்தவர் சின்னத்துரை. லாரி டிரைவர். இவர் தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவிலுக்கு லாரியில் லோடு ஏற்றிச்சென்றார். அப்போது பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் சோதனை சாவடி அருகில் இரவு நேரம் லாரியை நிறுத்த விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சின்னத்துரையை தாக்கி, கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துச்சென்று விட்டனர். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story