போலீஸ்காரரை தாக்கிய டிரைவர் கைது


போலீஸ்காரரை தாக்கிய டிரைவர் கைது
x

வாணியம்பாடி அருகே போலீஸ்காரரை தாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து டைல்ஸ் லோடு ஏற்றிக்கொண்டு லாரி கேரளாவுக்கு புறப்பட்டது. காட்பாடி பனைமடங்கி கிராமத்தை சேர்ந்த டிரைவர் அருண்பாபு (வயது 42) என்பவர் லாரியை ஓட்டினர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் கூட்ரோடு அருகில் சர்வீஸ் ரோடு வழியாக லாரி சென்றுள்ளது. அப்போது திருப்பத்தூர் வழியாக லாரி செல்ல முயன்ற போது அங்குள்ள போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த வாணியம்பாடி தாலுகா போலீஸ்காரர் சந்தோஷ் லாரியை தடுத்து நிறுத்தி, இரவு 8 மணிக்கு மேல்தான் திருப்பத்தூர் சாலையில் செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறி லாரியை ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால் லாரி டிரைவருக்கும், போலீஸ்காரருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அருண்பாபு போலீஸ்காரரை தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story