பராமரிக்க ஆள் இல்லாததால் கழுத்தை அறுத்து விவசாயி தற்கொலை


பராமரிக்க ஆள் இல்லாததால் கழுத்தை அறுத்து விவசாயி தற்கொலை
x

கரூரில் மனைவி இறந்தபிறகு, பராமரிக்க ஆள் இல்லாததால் விவசாயி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்


கழுத்தை அறுத்துக்கொண்டார்

கரூர் வையாபுரிநகர் 2-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 73). விவசாயியான இவருடைய மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் ராமலிங்கம் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் அவருக்கு வயது முதிர்வு காரணமாகவும், தன்னை பராமரிக்க தனது மனைவி இல்லை என்ற ஏக்கத்திலும் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி அதிக அளவில் தூக்கமாத்திரைகளை தின்றுவிட்டு, பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். ரத்தம் வெளியேறிய நிலையில் மயக்கம் அடைந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சாவு

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகள் சிவகாமி கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்ததால் விவசாயி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story