விஷம் குடித்து விவசாயி சாவு


விஷம் குடித்து விவசாயி சாவு
x

ஒரத்தநாடு அருகே விஷம் குடித்த விவசாயி உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு:

ஒரத்தநாட்டை அடுத்துள்ள கீழவன்னிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் சாம்பமூர்த்தி (வயது52).விவசாயி, இவர் நேற்று முன்தினம் இரவு பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாம்பமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சாம்பமூர்த்தி ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story