மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலியானார்.
காரையூர் அருகே ஒலியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னழகன் (வயது 70). விவசாயி. இவர், தனது நிலத்தில் உள்ள புளிய மரத்தில் ஏறி புளியம் பழங்களை உலுக்கி உள்ளார். அப்பொழுது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னழகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





