தடுமாறி விழுந்த விவசாயி சாவு


தடுமாறி விழுந்த விவசாயி சாவு
x
தினத்தந்தி 17 Sep 2023 6:45 PM GMT (Updated: 17 Sep 2023 6:45 PM GMT)

மாடிப்படியில் இருந்து தடுமாறி விழுந்த விவசாயி உயிரிழந்தார்.

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு அருகே கேசிங்கன் அண்ணாநகரை சேர்ந்தவர் சிவம் (வயது 48).விவசாயி. இவர், சம்பவத்தன்று கேசிங்கன் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அவரது நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு கைப்பிடி இல்லாத மாடிப்படியில் ஏறிய போது சிவம் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிவம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story