கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

அரக்கோணம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
அரக்கோணம்
அரக்கோணம் அருகே சித்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ் (வயது 45), விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
மது பழக்கத்திற்கு ஆளாகின நடராஜ் சம்பவத்தன்று மதுபோதையில் தனது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





