ஆட்டை காப்பாற்ற கிணற்றில் இறங்கிய விவசாயி தண்ணீரில் மூழ்கி பலி


ஆட்டை காப்பாற்ற கிணற்றில் இறங்கிய விவசாயி தண்ணீரில் மூழ்கி பலி
x

ஆட்டை காப்பாற்ற கிணற்றில் இறங்கிய விவசாயி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே துரிஞ்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 48), விவசாயி. இவருக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி அதே கிராமத்தில் ஒரு நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. இதனால் ஆட்டை காப்பாற்ற நாகராஜ் கிணற்றில் இறங்கினார். அப்போது அவர் திடீரென தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை கண்ட நாகராஜின் தம்பி வெள்ளியங்கிரி கூச்சல் போட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து அவரை தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்காததால் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ஆலங்காயம் தீயணைப்புத் துறையினர் வந்து நீரில் மூழ்கிய நாகராஜனை பிணமாக மீட்டனர். பின்னர் ஆலங்காயம் போலீசார் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story