சிறுபாக்கம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி

சிறுபாக்கம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலியானாா்.
சிறுபாக்கம்,
சிறுபாக்கம் அருகே கச்சிமயிலூர் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 41). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை நடவு பணிக்காக தனது வயலில் இரும்பு சக்கரம் பொருத்தப்பட்ட டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் டிராக்டர் இரும்பு சக்கரத்தில் அவர் சிக்கினார். இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





