முதல் வந்தே பாரத் ரெயில் என்ஜின் டிரைவர் பெரம்பலூரை சேர்ந்தவர்


முதல் வந்தே பாரத் ரெயில் என்ஜின் டிரைவர் பெரம்பலூரை சேர்ந்தவர்
x

முதல் வந்தே பாரத் ரெயில் என்ஜின் டிரைவர் பெரம்பலூரை சேர்ந்தவர் ஆவார்.

பெரம்பலூர்

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையாக சென்னை-கர்நாடக மாநிலம் மைசூருக்கும், மைசூரு-சென்னைக்கும் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேவையை நேற்று காலை கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த ரெயிலை சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு முதலில் இயக்கிய என்ஜின் டிரைவர் கனகசுப்புரத்தினம் ஆவார். இவரது சொந்த ஊர் பெரம்பலூர் ஆகும். தற்போது அவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.


Next Story