படகில் மயங்கி விழுந்து மீனவர் சாவு


படகில் மயங்கி விழுந்து மீனவர் சாவு
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:45 PM GMT)

படகில் மயங்கி விழுந்து மீனவர் உயிரிழந்தார்.

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டி அருகே உள்ள தாமோதரன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் மாயபெருமாள் (வயது 54). மீனவரான இவர் நேற்று அதே கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சிலருடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். நடுக்கடலில் வலையை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி படகில் விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடன் சென்ற மீனவர்கள் மாயபெருமாளை கரைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்தபோது மாய பெருமாள் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த தொண்டி கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், தனிப்பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருவாடானை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story