மீனவர் திடீர் சாவு


மீனவர் திடீர் சாவு
x
தினத்தந்தி 29 April 2023 6:45 PM GMT (Updated: 29 April 2023 6:46 PM GMT)

மீனவர் திடீரென இறந்தார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் ஏராளமான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அதிகமான விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் உள்ளன. தற்போது மீன்பிடி தடைக்காலமாக உள்ளதால் மீனவர்கள் அன்றாட செலவுக்காக சங்கு எடுத்தல் உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மண்டபம் டி.நகர் அடுத்த பொங்காளி தெருவை சேர்ந்த சீனி முகமது(வயது 43) கடலில் மூழ்கி சங்கு எடுக்கும் தொழிலுக்கு சென்றார். தெற்கு கடற்கரை கடலில் இறங்கி சங்கு எடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென சீனிமுகமதுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மண்டபம் கடற்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மீனவர் குடும்பத்திற்கு மீனவர் சங்க நிர்வாகி ஜாகிர் உசேன் மற்றும் பிரதிநிதிகள் ஆறுதல் தெரிவித்தனர். இறந்த சீனி முகமதுவுக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.


Next Story