விபத்தில் காயம் அடைந்த மீனவர் சாவு

உவரி அருகே விபத்தில் காயம் அடைந்த மீனவர் பரிதாபமாக இறந்தார்.
திருநெல்வேலி
திசையன்விளை:
உவரி அருகே ஜார்ஜ் நகரை சேர்ந்தவர் வெனஞ்சிஸ் மகன் ஹேப்பி (வயது 22), மீனவர். சம்பவத்தன்று குட்டம் தோப்புவிளை சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக கூத்தன்குழி பாத்திமா நகர் மூக்கன் மகன் கிங் என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் ஹேப்பிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story






