மீனவர்கள் 5-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை


கோடியக்கரையில் கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் 5-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

கோடியக்கரையில் கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் 5-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

கடல் சீற்றம்

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுதுறை, மணியன் தீவு, புஷ்பவனம் வெள்ளப்பள்ளம், கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக காணப்படுகிறது.இதனால் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் கடந்த 4 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.

5-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

இந்த நிலையில் கோடியக்கரையில் கடல் கடும் சீற்றமாக காணப்பட்டதால் நேற்று 5-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இதன் காரணமாக கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த தங்களது படகுகளை தண்ணீர் சூழ்ந்ததால் டிராக்டர் மூலம் படகுகளை மேடான பகுதிகளுக்கு கொண்டு சென்று நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடற்கரை வெறிச்சோடி கிடந்தது

கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த மீன்பிடி வலைகளை தண்ணீர் சூழ்ந்ததால் மீன்பிடிவலைகளையும் வாகனம் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை வெறிச்சோடி கிடந்தது.


Next Story