நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை; பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை; பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடந்து அதிகரித்துள்ளது.

ஈரோடு:

பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவும் மேலும் கோயம்புத்தூர் மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து அவ்வப்போது நீர் மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மதியம் 12 மணிக்கு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1022 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 82.49 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும் தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்காக வினாடிக்கு 900 கன அடியும் திறக்கப்பட்டது. கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது.

இன்று மதியம் 12 மணிக்கு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2388 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 82.54 அடியாக உயர்ந்தது. பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடியும் தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசன பகுதிக்கு வினாடிக்கு 900 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story